. காவியம் எழுத பாபா சம்மதம் அளித்தது
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி!குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
காதையை விட்ட இடத்தில் தொடர்வோம். ''என்னுடைய சரித்திரத்தை எழுதுவதற்கு உமக்கு ஸம்பூர்ணமான அனுமதி உண்டு" என்று சொல், ஸாயீ எனக்கு முழுமையான உறுதிமொழி ஈந்தார்.
''உம்முடைய காரியத்தை நீர் சிறப்பாகச் செய்வீராக; மனத்தில் அணுவளவு தயக்கமும் வேண்டா; என்னுடைய வார்த்தைகளில் முழுவிசுவாசம் வைத்து, மனத்தை திடப்படுத்திக்கொள்வீராக. --
''என்னுடைய லீலைகள் எழுதப்பட்டால், அவித்யையால் (அஞ்ஞானத்தால்) ஏற்பட்ட தோஷங்கள் உடைந்துவிடும். பக்தி பாவனையுடன் கேட்கப்பட்டால், வாழ்க்கையின் சிறுதொல்லைகளும் பிரச்சினைகளும் மறந்துபோகும்.--
''கேள்விக்கடல் பக்தியும் பிரேமையும் அலைகளாக ஆர்ப்பரிக்கும். மீண்டும் மீண்டும் கேள்விக்கடல் முத்துக் குளித்தால், ஞான ரத்தினங்களை உங்களுடைய கரங்களில் கொண்டுவந்து சேர்க்கும்"
இதைக் கேட்டவுடன் என் சந்தேகங்கள் அனைத்தும் பறந்தோடிவிட்டன. ஸாயீயின் பாதங்களில் விழுந்து பணிந்து, மனத்துதித்தவாறு அவருடைய சரித்திரத்தை எழுத ஆரம்பித்தேன்.
இச் சொற்கள் பாபாவின் உதடுகளிருந்து வெளிவந்தவுடன், பாபாவின் சரித்திரம் நிச்சயமாக எழுதப்படப் போகிறது என்னும் நிகழ்வுக்கு நற்சகுனமாக அதை என் மனத்தில் இருத்திக்கொண்டேன். நான் ஒரு சேவகன் மட்டுமே.
ஹரியினுடைய லீலை எம்மாத்திரமும் புரிந்துகொள்ளமுடியாதது என்பதைப் பாருங்கள்õ அவரால்தான் அதைப்புரிந்துகொள்ள முடியும்; வேறெவராலும் முடியவே முடியாது! வேதங்களும் உபநிஷதங்களும் சாஸ்திரங்களும் மற்றவையும் ஆழங்காணமுடியாத நிலையில் ஊமைகளாயின.
இனிவரும் ஒவ்வொரு பதிவுகளிலும் சாயீ பக்தர்கள் பெற்ற அனுபவங்கள் பின்வருமாறு ஆங்கிலத்தில் ஒரு குறிப்பாக வெளிவரும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
My Belief, My Confidence-Sai Baba
Anonymous Devotee from India says: I am a student Pursuing Masters in USA. I am a sincere devotee of Shirdi Baba since 2012. I am pursuing Masters in United States of America since 2013. I love Him so much and I always seek Baba before taking any decision. I never do anything against His words. I write to Him every day. Sometimes out of curiosity, I also predict my future (e.g. exam results). I would like to share one instance in this page. I was planning to visit India for my summer vacation. I was not sure if I had to, because I have to seek permission from my advisor and school authorities. Out of curiosity, I wrote a lot, with one saying, “will go” and another one saying, “Will go with some problem” and I got “will go with some problem”. I was so worried, but with some hope on Baba, I booked my flight after seeking permission from my advisor.
After one month, I came to know that I have to do my thesis with another advisor and I was so upset since I wasn’t sure if she’ll give me permission to visit India for two months and also my roommate told me to find another apartment as her parents will be staying with her and to find an apartment I have to come back soon. I was so worried so I wrote a lot again to know, if I had to reschedule and I was told that,” I will reschedule my ticket”. I was really depressed but I was very confident that Baba will never let me down. With so much hope I started reading Chapter 15 from Sai Satcharitra every day for three months. Finally Baba also made me face another tough situation before I depart to India. I had to board my flight in Chicago on May 14th and on 13th there was a fire in Chicago airport and many flights was cancelled. But this time I didn’t worry but was so confident that Baba will take care. I continued to pray Baba. Baba showered all His blessings on me and answered my prayers. I reached India without any problem and delays. I also visited Shirdi and thanked Baba for all His blessings. I only thought that Baba is used this situation to test my belief in Him. I have had so many instances where Baba has helped me. I am departing to USA today and I hope that Baba will continue to bless me. Om Sri Sai Ram!!
After one month, I came to know that I have to do my thesis with another advisor and I was so upset since I wasn’t sure if she’ll give me permission to visit India for two months and also my roommate told me to find another apartment as her parents will be staying with her and to find an apartment I have to come back soon. I was so worried so I wrote a lot again to know, if I had to reschedule and I was told that,” I will reschedule my ticket”. I was really depressed but I was very confident that Baba will never let me down. With so much hope I started reading Chapter 15 from Sai Satcharitra every day for three months. Finally Baba also made me face another tough situation before I depart to India. I had to board my flight in Chicago on May 14th and on 13th there was a fire in Chicago airport and many flights was cancelled. But this time I didn’t worry but was so confident that Baba will take care. I continued to pray Baba. Baba showered all His blessings on me and answered my prayers. I reached India without any problem and delays. I also visited Shirdi and thanked Baba for all His blessings. I only thought that Baba is used this situation to test my belief in Him. I have had so many instances where Baba has helped me. I am departing to USA today and I hope that Baba will continue to bless me. Om Sri Sai Ram!!
சாஸ்திர விற்பன்னர்களையும் வேதத்தின் பொருள் அறியாது சொல்லேயே மூழ்கியவர்களையும் இலக்கண விதிகளில் ஆர்ப்பரித்து யானையையும் பானையையும் உதாரணங்களாக எடுத்துத் தாம் சொல்வதே சரி என்று விதண்டாவாதம் செய்யும் கூர்த்த மதிபடைத்த பண்டிதர்களையும் பார்த்துப் பிரமித்துப்போகாதீர்கள்.
ஸ்ரீஹரி நிஜமான பக்தர்களுடன் விளையாடுகிறான்; அவர்களுடைய தாளத்திற்கு ஆடுகிறான்! பிரேமைக்கு அடிமையாகி கள்ளங்கபடமற்ற எளிமையான பக்தனைத் தேடி அலைகிறான். பாஷாண்டிகளுக்கு (வெளிவேஷம் போடுபவர்களுக்கு) அவன் என்றுமே அகப்படுவதில்லை.
''உன்னுடைய நல்வாழ்வு இதில்தான் இருக்கிறது; எனக்கும் அவதார நோக்கம் நிறைவேறுகிறது. பார்! இதைத்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்; இதுவே, என்னுடைய இடைவிடாத மனக்கிலேசமாகவும் இருந்து வருகிறது.--
''சாமா!நான் ஒன்று சொல்லுகின்றேன், கேள்!யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு நான், விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன். இதன் விளைவாக, அவனுக்கு என்மேல் உண்டான பக்தி பெருகுகிறது.--
''என்னுடைய புகழைப் பாடுபவனும், சரித்திரத்தைச் சுவையாக விவரித்துச் சொல்பவனும், அவர்களுக்கு முன்னும் பின்னும் மற்றும் அவர்களைச் சுற்றிய எல்லா இடங்களிலும் எப்பொழுதும் என்னையே காண்கின்றனர்.--
''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் இக் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--
''என்னுடைய கீர்த்தனங்களைப் பாடுபவனுக்கு பூரணமான பரமானந்தத்தையும் சாந்தியையும் திருப்தியையும் நான் அருள் செய்வேன். இது ஸத்தியமான வார்த்தை.-
''வேறெதிலும் பற்றில்லாமல் என்னையே சரணடைந்து, முழு விசுவாசத்துடன் என் புகழைப் பாடி, என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருப்பவனை நான் கடைத்தேற்றுகிறேன் என்பது என் ஸத்தியப் பிரமாணம்.--
''எங்கு என் நாமமும் பக்தியும் லீலைகள்பற்றிய ஏடுகளும் புராணமும் இதயத்தில் குறையாத சிந்தனையும் இருக்கின்றனவோ, அங்கு எப்படிப் புலனின்ப நாட்டம் தலைகாட்ட முடியும்?--
''என்னுடைய கதைகளை மாத்திரம் கேட்டால்கூடப் போதும், வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்; என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியிருந்தும் விடுவிப்பேன்.--
''பக்தியுடன் இக் கதைகளைச் செவிமடுங்கள்; கேட்ட பிறகு அவற்றை ஆழமாக மனத்துள் பிரதிபயுங்கள்; பிரதிபத்தபின் தியானம் செய்யுங்கள்; உன்னதமான திருப்தியைப் பெறுவீர்கள்.--
''நான் எனும் பிரக்ஞை மறைந்து, 'நானே அவன் (இறைவன்' என்னும் உணர்வு உதயமாகும். வேறெதிலும் பற்றில்லாத பரிபூரணமான சிரத்தையால், சித்தம் தெய்வீக சக்திகளால் நிறைந்து கனக்கும்.--
''ஸாயீ ஸாயீ என்ற நாமஸ்மரணம் கயுகத்தின் மலங்களை எரிக்கும். பேச்சினாலும் கேள்வியினாலும் விளைந்த பாவங்கள் என் முன்பாகச் செய்யப்படும் ஒரே
இவ்வேலை (சரித்திரம் எழுதுவது) அவ்வளவு சாமானியமில்லை என்றாலும், மரியாதையுடனும் பக்தியுடனும் நான் அவருடைய ஆணையை சிரமேற்கொண்டேன். பாபாவைப் போன்ற ஒரு தர்மதாதா (கொடைவள்ளல்) இருக்கும்போது, நான் ஏன் ஒரு தாழ்மையான நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
அவர் சில பக்தர்களைக் கோயில்கள் கட்டவைத்தார்; வேறு சிலரை நாமஸங்கீர்த்தனம் (பஜனை) செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொள்ளச்செய்தார்; சிலரைத் தீர்த்தயாத்திரை செல்லவைத்தார்; என்னை எழுதவைத்தார்!
அவர்களின் நடுவே நான் பாமரன். கருணைக்கடலும் தயாஸாகரமுமான ஸாயீ, என்னிடம் என்ன நற்குணம் கண்டு என்மீது பிரியமடைந்தார் என்பது எனக்கு விளங்கவில்லை.
ஆயினும், இதுவே குருவருள் செய்யும் அற்புதம். ஒரு துளி ஈரமும் இல்லாது உலர்ந்து காய்ந்துபோன மரமாயினும், ஏதும் செய்யாமலேயே பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்குமன்றோ!
வருங்காலத்தில் சிலர் ஆசிரமங்களை அமைப்பர்; சிலர் கோயில்கள் கட்டுவர்; சிலர் நதிக்கரைகளில் படித்துறைகளும் கட்டுவர். ஆனால் நாமோ, ஒற்றையடிப் பாதையிலேயே சென்று ஸாயீயின் சரித்திர பாடத்தைப் படிப்போம்.
சிலர் பயபக்தியுடன் பாபாவுக்குப் பூஜை செய்கிறார்கள்; சிலர் அவருடைய பாதங்களை இதமாகப் பிடித்துவிடுகிறார்கள்; என்னுடைய மனமோ பாபாவின் பெருமைகளைப் பாடவேண்டுமென்று ஆவல் கொண்டது.
கிருதயுகம் அல்லது ஸத்திய யுகத்தில் தவத்தினால் அடையப்பட்டது, திரேதாயுகத்தில் யாகங்கள் செய்ததால் அடையப்பட்டது, துவாபர யுகத்தில் சடங்குகள் நிறைந்த பூஜைகள் செய்ததால் அடையப்பட்டது, கலி யுகத்தில் நாமஸங்கீர்த்தனம் செய்வதாலும் குருவைத் தொழுவதாலும் அடையப்படும்.!
நான் எல்லாம் சிறிது சிறிது தெரிந்தவன்; எதையும் முழுமையாகத் தெரிந்து கொண்டவன் அல்லேன். இந்நிலைமையால், என்னுடைய தகுதியின்மை (சரித்திரம் எழுத) என்னமோ வெட்டவெளிச்சம்! அப்படியிருக்க, நான் ஏன் இந்தப் பிரம்மாண்டமானதும் கடினமானதுமான பணியை ஏற்றுக்கொண்டேன்?
எம்முயற்சியும் செய்யாது சும்மா உட்கார்ந்திருப்பேனானால், ஆக்ஞையை பங்கப்படுத்திய குற்றத்திற்கு ஆளாவேன். ஆணையை நிறைவேற்றவேண்டுமென்று இறங்கலாமென்றால், என்னால் சரிவரச் செய்துமுடிக்கக்கூடிய காரியமாகத் தெரியவில்லையே!
கிருதயுகம் - முதல் யுகம் - ஸத்தியயுகம் - புண்ணிய யுகம் - 17,28,000 ஆண்டுகள்
திரேதாயுகம் - இரண்டாம் யுகம் - இராமாயணம் நடந்த யுகம் - 12,96,000 ஆண்டுகள்
துவாபரயுகம் - மூன்றாம் யுகம் - மஹாபாரதம் நடந்த யுகம் - 8,64,000 ஆண்டுகள்
கலியுகம் - நான்காம் யுகம் - கடைசியுகம் - தற்போது நடக்கும் யுகம் - 4,32,000 ஆண்டுகள்
ஸமர்த்த ஸாயீயின் நிஜமான ஸ்திதியை (நிலைமையை) யார்தான் துல்யமாகவும் முழுமையாகவும் விவரிக்க முடியும்? பக்தஜனங்களுக்காக அவரே அருள்செய்து, விவரிக்கும் சக்தியை யாருக்காவது அளித்தால்தான் இது முடியும்.
வார்த்தைகளுக்கு எட்டாத விஷயத்தை விவரிக்க நான் ஏன் முயல்கிறேன் என்று எவரும் யூகம் செய்ய நான் இடமேதும் கொடுக்க விரும்பவில்லை.
நான் பேனாவைக் கையிலெடுத்தவுடன் பாபா என்னுள் இருக்கும் 'நான்' எனும் கர்வத்தை அடக்கி, அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தை அவரே எழுத ஆரம்பித்துவிட்டார். இவ்வாறாக, சரித்திரம் எழுதியதன் பெருமை அவருடையதே!
இதுவோ ஒரு முனிவரின் சரித்திரம்; அம் முனிவரேயன்றி வேறுயார் இதை எழுத முடியும்? புரிந்துகொள்ளமுடியாத பாபாவின் குணாதிசயங்களைப் புரிந்துகொள்ள முயல்வது, ஆகாயத்தை ஆலிங்கனம் செய்ய (அணைத்துக்கொள்ள)முயற்சி செய்வதற் கொப்பானது.
அவருடைய மஹிமையோ வானளாவியது; அதைப் பாடமுயலும் என்னுடைய மதியோ ஹீனமானது. ஆகவே, அவர் இந்த வேலையைத் தம் கைகளில் எடுத்துக்கொண்டு அவரளித்த உறுதிமொழியை நிறைவேற்றவேண்டும்.
பாபா! யான் பிறப்பால் பிராமணன் ஆயினும், வேதங்கள் புராணங்கள் என்னும் இரு கண்களைப் பெற்றவனில்லை. என் மேற்குடிப்பிறப்பு இவ்வாறு கறைபடிந்ததாயினும், நீர் அதற்குப் பெருமை சேர்த்துவிட்டீர்.
சுருதியும் (வேதமும்) ஸ்மிருதியும் (வாழ்க்கைக் கோட்பாட்டு நெறிகளும்) பிராமணனின் இரு கண்களாகும். இவற்றில் ஒன்று இல்லையெனில் அப் பிராமணன் ஒற்றைக் கண்ணன்; இரண்டுமே இல்லையெனில் அவன் குருடனாகிறான். நான் இரண்டாமவன்போல் ஹீனனும் தீனனும் ஆவேன்.
ஆனால், என்னுடைய குருட்டுக்குக் கோலாக நீர் அமையும்போது நான் ஏன் வருந்த வேண்டும்? கோன் உதவியுடன் அடிமேல் அடியாக எடுத்துவைத்து ஒற்றையடிப் பாதையில் உம்மைப் பின்தொடர்ந்து வருவேன்.
இப்பொழுது மேற்கொண்டு எப்படி முன்னேறுவது என்று, பாமரனாகிய எனக்கு விளங்கவில்லை. உம்முடைய திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள தேவரீர் என் புத்திக்கு வழிகாட்ட வேண்டும்.
அவருடைய யுக்திகளை அவரே அறிவார். எண்ணத்தால் கற்பனை செய்யமுடியாத அவருடைய மாயாசக்தி, ஊமையையும் பிருஹஸ்பதியைப் (தேவகுருவைப்) போன்று பேசவைக்கிறது; முடவனையும் மேருமலையைத் தாண்டவைக்கிறது.
நான் உம்முடைய பாதங்களின் தாஸன்; என்னை உதாசீனம் செய்துவிடாதீர். என்னுடல் சுவாஸம் ஓடும்வரை உம்முடைய திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளும்.
கதை கேட்கும் ஜனங்களே! இக்காவியத்தின் பிரயோஜனம் என்ன என்பதைப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். ஸாயீயே இக் காதையை எழுதச் செய்வார்; தவறு, தவறு, தம் பக்தகோடிகளின் மங்களத்திற்காக இக் காதையைத் தாமே எழுதுவார்.
என்ன நாதம் எழுகிறதென்பதில் புல்லாங்குழலுக்கோ ஆர்மோனியத்திற்கோ சிரமம் என்ன இருக்கிறது? சிரமம் அனைத்தும் வாசிப்பவனுடையதுதானே? நான் எதற்காகக் கவலைப்படவேண்டும்?
சந்திரகாந்தம்[சந்திரனுடைய கிரணம் பட்டவுடன் நீர் பொழியும் கல்] பொழியும் அமுதம் அதனுடையதா? இல்லவேயில்லை; அது, உதயமாகும் சந்திரன் விளைவிக்கும் அற்புதம்!
அதுபோலவே, ஆர்ப்பரிக்கும் பேரலைகள் ஸமுத்திரத்தின் வேலைப்பாடா என்ன? தானே அலைகளை உயரச்செய்ய ஸமுத்திரத்தால் ஆகாது; சந்திரோதயத்தைச் சார்ந்துதான் அது பொங்கமுடியும்.
கடல் நிறுவப்பட்ட சிவப்பு விளக்கேந்திய மிதப்புகள் எப்படிக் கப்பல்களைப் பாறைகளையும் சுழல்களையும் தவிர்த்து, வேகமாக முன்னேறச் செய்கின்றனவோ, அப்படியே--
அமிருதத்தைவிடச் சுவையான ஸாயீநாதனின் காதைகள், கடக்க இயலாத சம்சார ஸாகரத்தைக் கடப்பதை ஆபத்தின்றி சுலபமாக்கிவிடுகின்றன.
காதுவழியே இதயத்துள் புகுந்து, தேஹாபிமானத்தை (பௌதிக உடன்மேல் பற்றை) வெளியே தள்ளி, இரட்டைச் சுழல்கள்[இன்பம் / துன்பம் - வேண்டுதல் / வேண்டாமை - வெப்பம் / குளிர் - நன்மை / தீமை போன்றவை] எனும் மாயையை இல்லாது செய்துவிடும் ஞானிகளின் கதைகள் புனிதமானவை.
இக் காதைகள் ஒருவருடைய ஹிருதயத்தில் ஏற ஏற, மனத்திலுள்ள சந்தேகங்களும் கேள்விகளும் படிப்படியாக முடிச்சவிழும்; ஞானம் மலரும்; உடலில் ஏறியிருந்த கர்வம் இறங்கிவிடும்.
பாபாவின் தெய்வீகமான கீர்த்தியின் வர்ணனையைச் செவிமடுப்பது பக்தர்களின் மனமலங்களை எரிக்கும். ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகச் சுலபமான பாதை இதுவே.
மாயையைக் கடந்த சுத்த பிரம்மம் எது? மாயையை எவ்விதம் கடப்பது? ஹரிக்குப் பிரியமானவனாக ஆவது எப்படி? கர்மங்களையும் தர்மங்களையும் நன்கு பின்பற்றுவதாலா?
மனிதன் கடைசியாக அடையக்கூடிய மிக உன்னதமான நிலை எது? பக்தி எது? முக்தி எது? விரக்தி எது? வர்ணாசிரம தர்மம் என்றால் என்ன? அத்வைதம் என்றால் என்ன? இத்தியாதி விஷயங்கள் மறைபொருளானவை.
இவ்விஷயங்களில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஞானதாஹத்தைத் தணித்துக்கொள்ள, ஞானேச்வர், ஏகநாதர் போன்றோர் எழுதிய நூல்களை வாசிக்கவேண்டும்.
கிருதயுகத்தில் மனத்தையும் புலன்களையும் அடக்கித் தவம் செய்தல், திரேதாயுகத்தில் யாகம் செய்தல், துவாபர யுகத்தில் சடங்குகளோடு கூடிய பூஜை செய்தல், கயுகத்தில் கதாகாலட்சேபமும் நாமஸங்கீர்த்தனமும் செய்தல் -- இவை முக்தியடைவதற்கு உண்டான சாதனங்களாம். இவற்றுள் கயுக சாதனம் மிக சுலபமானது.
குருவின் கதைகளைக் கேட்பதென்னும் முக்தி மார்க்கம் நான்கு வர்ணத்தாருக்கும் உண்டு. பெண்களாக இருந்தாலும் பிற்படுத்தப்பட்டோராக இருப்பினும் ஜாதியே இல்லாதவராக இருப்பினும் இவர்களனைவருக்கும் மார்க்கம் இதுவே.
புண்ணியம் சேர்த்தவர்களே இக் காதைகளைக் கேட்பார்கள். சிலருக்குக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே தூக்கம் வந்துவிடும். அவர்களையும் ஸ்ரீஹரி எழுப்பிவிடுவார்!
முடிவேயில்லாத புலனின்பங்களை நாடி ஓடி, அடையமுடியாததால் மனமொடிந்து போனவர்களுக்குக்கூட, ஞானிகளின் கதாமிருதம் புலனின்ப வேட்கையிருந்து விடுதலை அளிக்கும்.
யோகமும் யாகமும் தியானமும் தாரணையும் நானாவிதமான பெருமுயற்சிகளால் அடையவேண்டியவை. ஒருமுகமான கவனம் ஒன்றைத்தவிர, இக் கதைகளைக் கேட்பதில் ஆயாஸம் ஏதுமில்லை.
இவ்விதமாக, ஸாயீயின் காதை நிர்மலமானது. பிரேமையுடன் இதை ஸத்ஜனங்கள் (நல்லோர்) செவிமடுக்கட்டும்; அவர்களுடைய பஞ்சமஹாபாபங்களும் வேரோடு எரித்து நாசமாக்கப்படும்.
மனிதப்பிறவி என்னும் பந்தத்தில் நாம் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறோம். இந்தக் கட்டுகளுள் நம்முடைய நிஜரூபம் மறைந்துகொண் டிருக்கிறது. கதையைக் கேட்பது இக் கட்டுகளைத் தளர்த்தி ஆத்மதரிசனம் கிடைக்கச் செய்யும்.
ஆகவே, இக் காதைகளை மரணபரியந்தம் நினைவில் வைப்போம்; தினமும் இவற்றைப் பரிசீப்போம். உலக வாழ்வாலும் அதனுடைய துக்கங்களாலும் பொசுக்கப்படும் ஜீவன்களுக்கு சாந்தி கிடைக்கும்.
பக்தியுடனும் விசுவாசத்துடனும் இக் காதைகளைப் படிப்பதாலும் கேட்பதாலும் ஸாயீ தியானம் ஸஹஜமாகவே (இயல்பாகவே) மலரும். ஸாயீயின் ரூபம் கண்முன்னே தோன்றி, பிறகு இதயத்தில் அமரும்.
இவ்வாறு ஸத்குருவின்மீது பக்தி செலுத்துவதால் உலகவாழ்க்கையில் பற்றற்ற மனப்பான்மை வளரட்டும். குருவைப்பற்றிய நினைவில் பிரீதியுண்டாகி, மனம் நிர்மலமாகட்டும்.
இவ்வெண்ணம் கொண்டே, ஸாயீ என்னை ஆசீர்வதித்திருக்க வேண்டும். என்னைச் சாக்காக வைத்துக்கொண்டு, அவருடைய திட்டத்தை அவரே நிறைவேற்றிக்கொள்கிறார்.
பால் மிகுதியாகச் சுரந்து, மடி கனத்து வத்தாலும், கன்றில்லாமல் பசு பாலை வெளியே விடாது. இது பசுவினுடைய உடன்பிறந்த குணம்; ஸாயீயினுடைய அருளும் அவ்வாறே.
சாதகப் பறவையான நான் இதற்கு ஆசைப்பட்டபோது, என்னுடைய அல்பதாகத்தை மட்டுமல்லாமல் மற்ற பக்தர்களின் தாகத்தையும் தீர்க்கும் வகையில் என் அன்னை என்மீது ஆனந்த மழையாகப் பொழிந்தார்.
என்னே ஒரு தாயின் பிரேமையும் பக்தியும்!ஒரு தாயால்தான் தன் குழந்தையின் பசியை உள்ளுணர்வால் அறிந்து, வாய் திறக்காதிருக்கும்போதே தன் முலைக்காம்பை அதன் வாயினுள் திணிக்க முடியும்.
ஆனால், அவளுடைய மெய்வருத்தத்தையும் சோர்வையும் யார் அறிவார்? குழந்தையோ ஏதும் அறியாதது. தாயைத் தவிர வேறு எவர், கேட்காமலேயே முலையமுதம் தருவார்?
கொலுசு அணிவதில் குழந்தைக்கு என்ன ஸ்வாரஸ்யம் (சுவை)? குதூகலத்தைத் தாயன்றோ அடைவாள்! அவ்வகையே ஸத்குரு மாதாவின் செய்கைகளும்.
தம்முடைய குழந்தையின் சின்னச்சின்ன ஆசைகளை யார் திருப்தி செய்யப்போகிறாரோ, என்று தாயைத் தவிர வேறு எவர் இளகிய மனத்துடனும் பரிவுடனும் ஏங்குவார்? தாய்ப்பாசம் அசாதாரணமானது!
ஸத்துவ குணங்களுடைய அன்னைக்குக் குழந்தையாகப் பிறப்பது என்பது பாக்கியசாலி களுக்கே அளிக்கப்படும் இறைவனின் வரம். குழந்தையை இவ்வுலகத்திற்குக் கொண்டுவர, தாய் பட்ட பிரஸவ வேதனையைக் குழந்தை அறியுமோ? [தொடரும்]